தமிழ்நாட்டில் தென்னை பிரதான பயிராக உள்ளது. மத்திய அரசு தேங்காய் பருப்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,335-க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் தேங்காய் பருப்பு பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அவை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், ஈரோடு மாவட்டத்திலுள்ள பூதப்பாடி, அந்தியூர், அவல்பூந்துறை, கோபிச்செட்டிபாளையம், கொடுமுடி, சத்தியமங்கலம், எழுமாத்தூர், வெப்பிலி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள இராசிபுரம், பரமத்திவேலூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, பெதப்பம்பட்டி, காங்கேயம், வெள்ளக்கோயில், மூலனூர், முத்தூர், மதுரை மாவட்டத்திலுள்ள த.வாடிப்பட்டி ஆகும்.
மேலும், இ-நாம் திட்டத்தின் மூலம் 13 ஒழுங்குமுறை
விற்பனைக்கூடங்களில் (ஆனைமலை, ஒட்டன்சத்திரம், அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், உசிலம்பட்டி, பரமத்திவேலூர், தேனி, பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, வெள்ளக்கோயில், குடியாத்தம் மற்றும் இராஜபாளையம்) மின்னணு பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேங்காய் பருப்பை காயவைப்பதற்கான உலர்கள வசதியும், தேங்காயை தேங்காய் பருப்பாக மாற்றுவதற்கு உலர்த்தும் எந்திர வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், விலை வீழ்ச்சி காலங்களில் விவசாயிகள் தங்கள் தேங்காய் பருப்பு மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்து 5 சதவிகித வட்டியில் 6 மாதங்கள் வரை அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடன் பெறும் வசதியும் உள்ளது (முதல் 15 நாட்களுக்கு வட்டி இல்லை) தேங்காய் பருப்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,335க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.103.35) ஈரோடு மாவட்டம் பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10476-க்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
எனவே, தென்னை விவசாயிகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் கைபேசி எண் 9445657993-ஐ தொடர்பு கொள்ளாம் என வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]