அஜீத்குமார் – வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛வலிமை’. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.
போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படத்தின் இரண்டு பாடல்கள், முன்னோட்டம் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாகி இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 30 அன்று மாலை 6.30 மணியளவில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். 3.05 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலர் முழுக்க அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளாக நிறைந்துள்ளன.
டிரைலரின் ஆரம்பமே அதிரடி ஆக்க்ஷன் உடன் ஆரம்பமாகிறது. படத்தில் அர்ஜூனன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்குமார்நடித்துள்ளார்.மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் அஜித்குமார் ஒரு தற்கொலை தொடர்பான விசாரணையில் ஈடுபடுகிறார்இதன் பின்னணியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய கிரைம் நெட்வொர்க் இருப்பதை கண்டறியும் அஜித்குமார் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையாக இருக்கும் என டிரைலர் உணர்த்துகிறது.
வில்லனாக கார்த்திகேயன் மிரட்டலாக நடித்துள்ளார். 3 நிமிடம் டிரைலர் மொத்தமும் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள் தான் தூள் கிளப்பி உள்ளது. அஜீத்குமார் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை டிலைரில் இயக்குனர் பூர்த்தி செய்துள்ளார் . ஹாலிவுட் தரத்திலான ஆக்ஷன் காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளனஏழையா இருந்துட்டு உழைப்பவர்களை கேவலப்படுத்தாத, உயிரை எடுக்குற உரிமை நமக்கு இல்ல.
ஜெயிக்கணும், பணம் சம்பாதிக்கணும். வலிமை இருப்பவன் அவனுக்கு என்ன தேவையோ அதை எடுத்து கொள்வான். வலிமை அடுத்தவனை காப்பாற்றத்தான், அழிக்க அல்ல…. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவனிடம் அவனது சமநிலை தவறினால் அவனது கோபம் எப்படி இருக்கும் என்பதை காட்டுவேன்… உள்ளிட்ட வசனங்களும் டிரைலரில் கவனம் ஈர்த்துள்ளன.
மொத்தத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் இனி ‘வலிமை அப்டேட்’ என எங்கும் குரல் எழுப்ப மாட்டார்கள். அந்தளவுக்கு ஒரு மாஸான அதிரடி டிரைலரை வழங்கி உள்ளார் வினோத்.
அதேசமயம் காலை முதலே டிரைலரை எதிர்பார்த்த ரசிகர்கள் வலிமை பற்றி சமூகவலைதளங்களில் அதிகம் டிரெண்ட் செய்த வண்ணம் இருந்தனர். டிரைலர் வெளியான பின் உலகளவில் டிரெண்ட் ஆக்கினர். டிரைலர் வெளியான அரைமணி நேரத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]