விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இராஜபாளையம் இந்து அறநிலை துறைக்க பாத்தியப்பட்ட அருள்மிகு மாயூரநாதசாமி திருக்கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைபோல் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம்பெருமான், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கார்த்திகை தீப நாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் இராஜபாளையம் சொக்கர்கோவில், குருசாமி கோவில், மொட்ட மலை தண்டாயுதபாணி சுவாமி கோவில்களிலும் திருக்கார்த்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.









