நம்பர் நடிகையால் பண்ணும் காரியங்களால் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருகிறாராம் அந்த டைரக்டர். இப்படியே போனால், முதலுக்கே மோசம் வந்து விடும் போல இருக்கே என தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம். பல ஆண்டுகள் போராடி ஒரு படத்தை எடுத்து இப்போது தான் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்திருக்கிறார் அந்த டைரக்டர். இந்த படத்தின் ப்ரொமோஷனுக்கு கூப்பிட்டதுக்கே நம்பர் நடிகை வர மறுத்து விட்டாராம்.
உண்மையில் விழாவிற்கு போகா விட்டாலும் மற்ற வழிகளில் படத்திற்கு ப்ரொமோஷன் செய்யும் முயற்சிகளில் தான் இருந்து வந்தாராம் நம்பர் நடிகை. ஆனால் பட ஷுட்டிங்கின் போது நடந்த பார்ட்டியில் சமத்து நடிகையுடன் டைரக்டர் காட்டிய ஓவர் நெருக்கத்தால் செம கடுப்பாகி தான் அத்தனையையும் நிறுத்தி விட்டாராம் நம்பர் நடிகை. இது பற்றி டைரக்டரிடமே சண்டை போட்டு, பிரேக் அப் வரை போன நம்பர் நடிகை, படத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒதுங்கி விட்டாராம். இந்த படத்திற்கு தான் இப்படி என்றால், அடுத்த படத்திற்கும் பெரிய ஆப்பாக வைத்து விட்டாராம் நம்பர் நடிகை. இதனால் மொத்த வாழ்க்கையும் போய் விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராம் டைரக்டர்.
முதல் முறையாக பெரிய நடிகரை வைத்து படம் இயக்கும் சான்ஸ் கிடைத்ததால், நம்பர் நடிகையின் ராசி என கொண்டாடி பூரித்து போயிருந்தாராம் டைரக்டர். ஆனால் டைரக்டர் இயக்க போகும் பெரிய நடிகரின் படத்திலும் நம்பர் நடிகையை நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு நினைத்துள்ளது. இதற்காக நம்பர் நடிகையிடம் பேசிய போது, தனக்கு 10 கோடியும், டைரக்டருக்கு 10 கோடியும் சம்பளம் வேண்டும் என கறாராக கேட்டுள்ளாராம். அதோடு, நம்பர் நடிகை சமீப நாட்களாக ஸ்லிம்மாகிறேன் என்ற பெயரில் டோக்கு விழுந்த கிழவி ரேஞ்சுக்கு போய் விட்டதால் மார்க்கெட்டில் தற்போது அவரை பெரிதாக யாரும் தேடுவதில்லையாம்.
இந்த விவகாரம் பெரிய நடிகரின் காதுக்கு போக, செம டென்ஷன் ஆகி விட்டாராம். இதனால் டைரக்டர் இப்போது வெளியிட்டிருக்கும் படம் ஓடினால் தான், தனது படத்தை இயக்குவது பற்றி மேற்கொண்டு பேசப்படும். இல்லாவிட்டால் டைரக்டரை மாற்றுவது பற்றி சிந்திக்கலாம் என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி விட்டாராம்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]