




உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவைச் சேர்ந்த சத்ய நாதெள்ளா இருந்து வருகிறார்.இவருக்கு ஜெயின் நாதெள்ளா என்ற 26 வயது மகன் இருந்து வந்த நிலையில் அவர் நேற்று காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்ய நாதெல்லா மகன் ஜெயின் நாதெள்ளா பிறவியிலேயே தசை இயக்கம், தசைநார் பெருமூளை வாதம் ஆகிய குறைகளுடன் பிறந்தார் என தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். ஜெயின் நாதெள்ளா மறைவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில், ‘நமது சிஇஓ சத்ய நாதெள்ளா மகன் ஜெயின் நாதெள்ளா மறைவால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

