நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷாலின்‘வீரமே வாகை சூடும்’ குடியரசு தினத்தையொட்டி வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.
ட்ரெய்லரில் ‘தன்னோட உயிரை பாதுகாத்துக்க வேற வழியே இல்லாம கொலை செய்றதுக்கும், மத்தவங்களைக் கொன்னு உயிர் வாழணும்னு நினைகிறதுக்கும் வித்தியாசம் இருக்கு’, ‘ஒரு குற்றத்தைக் கண்டுப்பிடிக்கிறதைவிட அதை எந்தக் கண்ணோட்டத்துலப் பார்க்கணும்ங்கிறதுதான் ஒரு நல்ல போலிஸ்காரனோட முக்கியத் தகுதி’ போன்ற வசனங்களும் காட்சிகளும் கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை நினைவூட்டுகிறது.
பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றக் கணவரை கொலை செய்துவிட்டு சரணடைந்தார் உஷா ராணி என்றப் பெண். எந்த சூழலில் அப்பெண் தனது கணவரையேக் கொன்றார் என்பதை உணர்ந்த மதுரை மாவட்ட எஸ்.பி அஸ்ரா கார்க் தற்காப்புக்காக செய்யப்பட்டக் கொலை என்றுக்கூறி ஐபிசி பிரிவு 100 -ன் கீழ் உஷா ராணியை விடுதலை செய்தார். நீதிமன்றமும் அஸ்ரா கார்க் விடுவித்தது சரி என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எஸ்.பி அரவிந்தனும் ஒரு பெண்ணை விடுதலை செய்தார். இந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பாக படம் இருக்கலாம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. அதற்கேற்றார்போல், காவல்துறை அதிகாரியாக விஷால் நடிக்கிறார்.
மேலும், ‘ஒரு குற்றவாளி எங்கருந்து உருவாகுறான் தெரியுமா? நம்மளைக் காப்பாத்த ஒருத்தன் இருக்கான்னு அவன் நினைக்கும்போதுதான்’. ‘நான் ஒரு கொசு. என்னால முடிஞ்சளவுக்கு போராடுவேன். நாளைக்கு ஒரு ஆட்டுக்குட்டிப் பாதிக்கப்படும்.
ஒருநாள் சிங்கம் பாதிக்கப்படும். கொசு, ஆட்டுக்குட்டி, நாய், நரின்னு எல்லாத்தையும் இவனுங்க கொன்னுடலாம். ஆனா, சிங்கத்தை இவனுங்களாலக் கொல்ல முடியாது’ போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளன.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]