பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழினிசாமி தொடர்ந்த வழக்குகில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பத்து நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மனு அளித்திருந்தார்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் இதனை அங்கீகரிக்காமல் தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையை மட்டும் உறுதி படுத்தி வருகிறது. இந்தநிலையில் பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழினிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும், அதிமுக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாதகவும் கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.