தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள பண்பொழி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் முருகன் (வயது 42) (கொத்தனார்) இவரது மனைவி நாச்சியார் (வயது 35). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று முருகன் அவரது வீட்டிற்கு இன்னொரு பெண்ணை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த முருகனின் மனைவி நாச்சியார் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகன் அழைத்து வந்த பெண்ணுக்கும், நாச்சியாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. உடனே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு முருகன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து அவரது மனைவி நாச்சியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் தகராறு முற்றவே கோபமடைந்த நாச்சியார் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து முருகனின் கண்ணில் தூவிவிட்டு அருகே இருந்த கட்டை எடுத்து முருகனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரியவே பதட்டத்தில் நாச்சியார் கூச்சலிட்டு உள்ளார்.
உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கவே, சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை போலீசார் முருகனை கட்டையால் அடித்துக் கொலை செய்த நாச்சியாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் கோபமடைந்த மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் திருமலாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]