மேட்டுபாளையம் – குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்புகளும் இன்றி தப்பினர். கார் எரிந்துகொண்டிருப்பதை கண்ட அப்பகுதியினர் குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.