பொங்கல் என்றால் நம் நினைவில் முதலில் வருவது நம் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தான். தன் மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு விவசாயியும் இந்த ஜல்லிக்கட்டில், தான் பெற்ற பிள்ளைப்போல் வளர்க்கும் காளையை வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிட்டு அதன் வீரத்தை கண்களால் மெச்சுவான்.
அதேபோல் இந்த வருடம் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசலிருந்து மாடு விடும் போட்டியில் மாட்டையும் மனிதர்களையும் பெரிய தடிகொண்டு ஒருவன் காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் காட்சி மனதை கனக்க செய்தது.இது எந்த வகையில் நியாயமானது… அவனைப் போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாகும்.தூக்கமின்றி பசியின்றி இரவென்றும் பகலென்றும் பாராமல் மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை சரி செய்து போட்டியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து வந்து அங்கே அடி வாங்குவதும், மனிதன் அடிவாங்குவது ஒரு புறமிருந்தாலும் வாயில்லா ஜீவன் மாட்டை அடித்து துன்புறுத்துவது எப்பேர்ப்பட்ட கொடுமையான காரியம் என்பதை இந்த வீடியோ மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய இழி செயலில் ஈடுபட்டவரின் மீது காவல்துறை நடவடிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களுடைய கேள்வியாக இங்கேயே வைக்கப்படுகிறது.
ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் மாடு விடும் போட்டியில் எல்லோருக்கும் சொந்தம் எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்தவகையில் மாடுகளை விடுவதற்கு அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு வருகின்ற மாடுகளையும் மாட்டின் உரிமையாளர்களையும் கையில் ஏந்திய பெரிய தடி கொண்டு அடிப்பதை பார்த்தாள் அங்கமே பதறுகிறது, உள்ளமே ஓடி ஒளிகிறது, உடம்பு முழுவதும் தவி தவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே தயவு செய்து இது போன்ற அரக்கர்களை மாடு விடும் போட்டியலே உள்ளே இறங்க விடாமல் சம்பந்தப்பட்ட காவல் துறையையும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவரின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளும் இறங்கி இதை சீர்செய்து ஒழுக்கமான முறையிலேயே அந்த விழாவை நடத்த வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது. வாயில்லா ஜீவனை கொடுமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அந்நபரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இதற்கு தமிழக அரசும், மாவட்ட ஆட்சியாளரும் அது சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் முயற்சி எடுத்து இதுபோன்ற கொடிய அரக்கர்களை களை எடுக்குமா ஆனால், மாட்டின் உரிமையாளர்களும், விவசாயிகளும் அச்சம் பயம் நீங்கி சுதந்திரமாக மாடு விடும் போட்டியில் கலந்து கொண்டு தன் மாட்டின் உத்வேகத்தை கண்டு களிக்கும் பொருட்டு அவர்களுக்கு கிடைக்கும்.
இப்படி வாயில்லா ஜீவன்களுக்கு நேரும் துன்பங்களுக்கு மக்கள் தயங்கமால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும் வகையில் கையாளுதல் நன்று…
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]
- மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைதிருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் […]
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]