நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் தாக்கலில் இடம் பெற்றிருந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஏழைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். நாடு முழுவதும் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து குறிப்பிட்ட அவர்கள், , பெரிய பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் நன்மை அளிக்கும் என்று தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் கபில் சிபில், இந்த பட்ஜெட்டில் எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை, நீண்ட கால திட்டங்களும் இல்லை என்று அறிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும். அப்போது தான் இந்த நாட்டின் கள நிலவரம் என்ன என்பது அவருக்கு புரியும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் நேற்று பேசிய போது, ’70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவை உறுப்பினர்கள், கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நிற்பது இதுவே முதல்முறை’ என்று குறிப்பிட்டார். பின்பு தன்னுடைய ட்விட்டரில் ட்வீட் செய்த அவர், ‘இணை அமைச்சர்கள் இன்னும் மோசம், ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட தகவல்களையும், மோடி கோஷங்களையும் இங்கே வந்து பாடுகின்றனர்’ என்று குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கான்ன முன்னுரிமையை அடையாளப்படுத்துவதில் தோல்வியுற்றது பாஜக என்று கூறினார் சி.பி.ஐ. உறுப்பினர் ஜர்னா தாஸ் பைத்யா. எல்.பி.ஜி. சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்பட்டது தொடர்பாகவும், அங்காடி ஊழியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் ஏதும் கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சியின் சுக்ராம் சிங் யாதவ், விவசாயிகளின் போராட்டம் குறித்தோ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிரைவிட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவது குறித்தோ ஏன் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுக எம்.பி. முகமது அப்துல்லா இந்த பட்ஜெட் குறித்து பேசிய போது, உலகத்திலேயே இல்லாத ஒன்றுக்காக 30% வரி விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை. கிரிப்டோகரன்சி சட்டமாக்கப்படவே இல்லை. ஆனால் அதற்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசிய அவர், பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘சானிட்டரி நாப்கின்களுக்கு’ 12% வரி ஆனால், வைர நகைகளுக்கான இறக்குமதி வரி வெறும் 5% என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஏழைப் பொதுமக்களின் நலன்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட் புறந்தள்ளிவிட்டது என்று தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]