• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

துணிவு- வாரிசு இன்று ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டத்தால் பொதுமக்கள் அவதி

Byஜெ.துரை

Jan 11, 2023

அஜித் குமாரின் துணிவு படம் மற்றும் விஜய் படம் வாரிசு இன்று ரிலீஸ் ஆவதை ஒட்டி சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
அஜித் குமாரின் துணிவு படமும் விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை ஒட்டி சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் காட்சியாக அஜித்தின் துணிவு படம் இரவு ஒரு மணிக்கும், விஜயின் வாரிசு படம் நான்கு மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனை ஒட்டி அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மாலை 6:00 மணி முதலே ஆட்டம் பாட்டம் என வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனால் கோயம்பேடு சாலை இருபுறமும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது, அஜித் நடித்த துணிவு படம் ஒரு மணிக்கு ரிலீஸ் ஆவதால் அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் ரோகிணி திரையரங்குகளில் குவிந்தனர்,

அஜித் ரசிகர்கள் விஜய் பேனரை கிழித்தும், பட்டாசுகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும் அலப்பறை செய்தனர்.கூட்டத்தில் பெரும்பாலானோர் குடித்துவிட்டு வந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர், மேலும் ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று கொண்டு வழியில் போகின்ற நான்கு சக்கர வாகனங்களில் ஏறியும், அவசர ஊர்திக்கு வழி விடாமலும் இருந்ததால் பொதுமக்களிடையே முகசூழிப்பை ஏற்படுத்தியது… விஜயின் வாரிசு படம் 4 மணிக்கு ரிலீஸ் ஆவதால் விஜயின் ரசிகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர், கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், காவல்துறை கட்டுப்பாட்டுகளையும் மீறி ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு செய்தனர்.மேலும் ரசிகர்களின் கூட்டம் முந்தைய நாள் ஆறு மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை அலை மோதியது,தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு 13 முதல் 16 வரை ரசிகர்கள் காட்சி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.