• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டாஸ்மார்க் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

ByS. SRIDHAR

Dec 5, 2025

புதுக்கோட்டை மாநகராட்சியில் பகுதியில் இன்று திலகர் திடல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழிய ர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து டாஸ்மார்க் நிர்வாக ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமை மற்றும் தொற்று நோய்களை உருவாக்கும் காளி எச்சில் மது பாட்டில்கள் சேகரிக்கும் பணியை பணியாளர்கள் மீது திணிக்காத என்ற கண்டன கோசங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் சௌமியமூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தின் தோழமை சங்க நிர்வாகிகள் அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி டாஸ்மார்க் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.