பாஜக அரசு டெல்லியை போல் அனைத்து மாநிலங்களையும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அனைத்து மாநில காவல்துறையையும் இனி ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கீழ் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அலர்ட் கொடுக்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி கார் மேம்பாலத்தில் 15 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். தொடர்ந்து, மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. அதன் தொடர்ச்சியாக, மீண்டும் விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தன்னை உயிருடன் செல்ல அனுமதித்ததற்காக நன்றி என மோடி அங்கிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு சென்றதாக அப்போதே தகவல் வெளியானது.
இந்த சம்பவம் தான் கடந்த சில தினங்களாக தேசிய அளவில் முக்கிய விவாதப் பொருளானது. பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என பஞ்சாப் மாநில அரசை பாஜக குற்றம் சாட்டுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து விட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக சதி செய்வதாக அம்மாநில முதல்வர் சரஞ்சித் சிங் சென்னி குற்றம் சாட்டியுள்ளார். மோடி கலந்துகொள்வதாக இருந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வரவில்லை. எனவே கூட்டத்தை ரத்து செய்ய நடத்தப்பட்ட ஸ்டண்ட் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறினர்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க பாஜக இதை காரணமாக வைத்து முக்கிய திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தேர்தல் என பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. மாநில அரசின் அதிகாரங்களை குறைப்பதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
ஜிஎஸ்டிக்குப் பின்னர் மாநிலங்களின் வரி வருவாயும் ஒன்றிய அரசு மனது வைத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக மாநில அரசுகளின் கீழ் உள்ள காவல் துறையையும் டம்மியாக்கும் வேலை நடைபெற உள்ளது. டெல்லி தனி மாநிலமாக இருந்தாலும் அதன் காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ்தானே வருகிறது. அதேபோல் அனைத்து மாநில காவல்துறையையும் மாற்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசிடம் இருக்கும் மிகக் குறைந்த அதிகாரமும் பறிக்கப்படும். இதற்கான வேலைகளை பஞ்சாப் சம்பவத்தை காரணமாக வைத்து மோடி அரசு தொடங்கியுள்ளது” என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.
- பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்கு பின் முகத்தை காட்டாத இபிஎஸ்…அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக […]
- இபிஎஸ்-ன் அடுத்த கட்ட நகர்வு.. அவசர வழக்காக மேல்முறையீடு!!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி […]
- அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!!அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்ட நிலையில் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் சசிகலா […]
- ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.ரெயில்களில் பயணம் […]
- மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]
- ஆன்லைன் ரம்மி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய முடிவுஆன்லைன் ரம்மியை தடைசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரை […]
- இனி பேருந்தில் செல்ல சில்லறை தேவையில்லை… ஒரு க்யூஆர் கோட் போதும்!தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக […]
- 35 ஆயிரத்தை கடந்த குரங்கு அம்மை பாதிப்புஉலக அளவில் குரங்கை அம்மை பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைகடந்துவிட்டதாக அதிரச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிரிக்க […]
- இரவோடு இரவாக கட்சி தாவிய முன்னாள் அமைச்சர்…அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் […]
- அழகு குறிப்புகள்மென்மையான சருமத்திற்கு: குழந்தையைப் போல மென்மையான சருமத்தைப் பெறுவதற்கு, 2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 […]
- சமையல் குறிப்புகள்சோயா உருண்டைக்குழம்பு: தேவையான பொருட்கள்: தாளிக்க :சீரகம் : 1 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு […]
- கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புகிறார்இலங்கையில் அந்த நாட்டு மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அடுத்தவாரம் […]
- கிசான் திட்டம்… அடுத்த மாதம் 12ஆம் தவணை..இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 19: இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்சுறவுக் கோட்டன்ன முள் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக […]