• Mon. May 6th, 2024

ஆகஸ்ட் 14ல் தமிழக பள்ளிகளில் இனிப்பு பொங்கல்..!

Byவிஷா

Aug 10, 2023

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னால் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வரும் நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளின் போது இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வருடம் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாததால் ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *