• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சென்னையில் இன்று குரூப் 1 முதன்மைத் தேர்வு ஆரம்பம்..!

Byவிஷா

Aug 10, 2023

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது.
சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகள் குரூப் ஒன் தொகுதியில் வருகின்றன. இதில் 92 காலை பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் முதல் நிலை தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று முதன்மை தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.