நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்று
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கம் மூலம் சமூக சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்து வருகிறது. ஆகையால் எங்கள் தலைவர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று வெளிப்படையாக அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.




