இந்தியாவில் மனித மலத்தை மனிதனே சுத்தம் செய்கிற அவலம் நீடித்துவருகிறது.சில நேரங்களில் இது போன்ற பணிகளில் விஷவாயு தாக்கி பலர் பலியான சம்பவங்களும் சம்பங்களும் நடைபெற்று வருகின்றன.
மனித மலத்தை மனிதனே சுத்தம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை ஐஐடியின் "ஹோமோசெப்" என்ற ரோபோ ஈடுபபடுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதல் முறையாக 10 இடங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும்,தூய்மை பணியாளர்களே அதை இயக்குவார்கள் எனவும் தமிழ அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் மற்றும் மலக்குழி மரங்கள் முற்றிலும் ஒழியும்.