ஏ சாமி… ஐயா சாமி… ’ என எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருக்கும் புஷ்பா படத்தின் தமிழ் பதிப்புக்கு குரல் கொடுத்தவர், மக்களிசை பாடகி ராஜலட்சுமி. ‛ஏ மச்சான்… சின்ன மச்சான்…’ என அடையாளப்படுத்தப்பட்டு வந்த ராஜலட்சுமி, ‛ஏ சாமி….’ என மாற்றப்பட்டிருக்கிறார். அந்த பாடல்கள் பாட கிடைத்த வாய்ப்பு என்ன, எப்படி கிடைத்தது என்பது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளனர்.
அவர் அளித்த பேட்டி இதோ பிற மொழி படங்கள்பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. விஜய் சூப்பரில் தான் பிற மொழி படங்கள் பார்க்க தொடங்கினேன். அதில் தான் அல்லு அர்ஜூன் படங்களை பார்த்தேன். ஒருநாள் புஷ்பா படம் வரவிருப்பதாக செய்தி பார்த்தேன். நான் ஊரில் இருந்த போது, தேவி ஸ்ரீபிரசாத் சார் அலுவலகத்தில் இருந்து அழைத்தார்கள்.

ஒரு பாடல் உள்ளது வாங்க, ட்ரை பண்ணி பார்க்கலாம் என்றனர். நான் ஊரில் இருக்கிறேன் என்றேன்; சரி, வந்ததும் வாங்க என்றார்கள். இரண்டு நாள் டைம் கேட்டு, சென்னை திரும்பியதும் அங்கு சென்றேன். ஒரு தெலுங்கு பாடலை போட்டு காட்டினார்கள். இதை தான் தமிழில் பாட வேண்டும் என்றார்கள். எனக்கு இந்த பாடல் வித்தியாசமாக இருக்கும் என தோன்றியது. என்ன படம், எதற்கான பாடல் என்றெல்லாம் தெரியாது.
என்னை ஒரு பல்லவியை பாடச் சொன்னார்கள். இரண்டு மணி நேரம் அதை பாடினேன். திடீரென தேவிஸ்ரீபிரசாத் வந்தார், நான் பாடியதை பார்த்துவிட்டு ‛நல்லா இருக்கு… நீங்களே பாடுங்க… கொஞ்சம் பெரிய படம் ராஜீ… நாம நல்லா பண்ணனும்’ என்றார்
உங்க வீடு பக்கத்துல தானே இருக்கு… டீ குடிச்சுட்டு வந்து பாடுங்க.. சாப்பிட்டு வந்து பாடுங்க… எவ்வளவு டைம் வேணாலும் எடுத்துக்கோங்க… ஆனா நல்லா பாடிடுங்க…’ என தேவிஸ்ரீபிரசாத் சார் சொல்லிட்டார். இந்த வாய்ப்பை விட்டுட கூடாதுடானு நானும் மெனக்கெட்டேன்.
மேக்கிங் எடுப்பார்கள் என கனவில் கூட நினைக்கவில்லை. அதுவரை புஷ்பாவிற்கு தான் பாடியிருக்கேன் என, எனக்கு தெரியாது. பாடல்கள் 5 மொழியில் ரிலீஸ் ஆனாலும், தெலுங்கு அளவிற்கு ஓப்பனிங்கில் வரவேற்பு இல்லை. யாருக்கும் அந்த பாடல் தெரியவில்லை. கச்சேரியில் கூட பாடினேன், யாருக்கும் அது தெரியவில்லை. அப்புறம் பார்த்தால், பாடல் எங்கேயோ போய்விட்டது.
நான் எத்தனையோ சாமி பாடல்களை மேடையில் பாடியிருக்கேன்ஆனால் ,இந்த சாமி பாடலுக்கு கிடைத்த வரவேற்பு வேறு மாதிரி இருந்தது. புரட்டாசியில் நான் பெருமாளுக்கு அர்ப்பணிப்பேன். அந்த நேரத்தில் இந்த பாடல் வாய்ப்பு வந்தது. எப்படி இருக்குமோ என சென்றேன்… அங்கே போய் பார்த்தால், எல்லாமே சாமி என்றே இருந்தது. ஒரே ஹேப்பி…!
முதலில் பாடல்கள் பாடும் போது, ஏதாவது ஒரு கண்டண்ட் எடுத்து அதை பாடும் போது, அதற்கு சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு பெரிய மனஉளைச்சலாகவும் இருந்தது. எதை செய்தாலும், எதை பேசினாலும் விமர்சிக்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் இது இப்படி தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். வெளி உலக விமர்சனங்களை மூளையில் ஏற்றக்கூடாது. பாசிட்டிவ் விமர்சனங்களை படித்து மகிழ்ந்து கடந்துவிட வேண்டும் என்றார்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]