வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடக்க உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றனர்.
மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ‘நலன் காக்கும் அணி’ என்ற அணியும், இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் ‘உரிமை காக்கும் அணி’யும் போட்டியிடுகின்றனர்.



தயாரிப்பாளர்கள் ‘நலன் காக்கும் அணி’யில் தற்போது தலைவராக இருக்கும் முரளி ராமநாராயணன் தலைமையிலும். ‘உரிமை காக்கும் அணி’யில் தற்போது செயலாளராக இருக்கும்மன்னன் தலைமையிலும் போட்டியிடுகின்றனர்.இந்த இரண்டு அணிகளுமே தற்போது வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இரண்டு அணிகளிலும் சில மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு அந்தந்த அணிகளுக்கு ஆதரவளிப்பதாக சொல்லியுள்ளனர்.மன்னன் தலைமையிலான ‘உரிமை காக்கும் அணி’யின் வேட்பாளர் அறிமுக கூட்டம் வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு மன்னன் அணியினருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தக் கூட்டத்தில் பேசும்போது,
“நான் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால் இங்கே வருவதற்குத் தாமதமாகிவிட்டது. நான் இங்கு வர மாட்டேன். என்னை வர விடாமல் எதிரணியினர் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்று அனைவரும் நினைத்திருப்பார்கள்.
ஏனென்றால், கடந்த மூன்று நாட்களாக என்னிடம் ‘நலன் காக்கும் அணி’யில் இருந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எனக்கு எப்போதுமே எதிர்நீச்சல் போடுவதுதான் பிடிக்கும். ஆகையால்தான் நான் ஒரு முடிவு எடுத்து விட்டால், பின் வாங்க மாட்டேன். அது அவர்களுக்கும் தெரியும்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.
எதிரணியில் போட்டியிடும் வேட்பாளர்களை விலைக்கு வாங்கி வாபஸ் வாங்க வைக்கின்றனர். இப்போது வாக்குக்கு பணம் கொடுக்கும் வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த செயலை ஊக்குவிக்காதீர்கள். கை நீட்டி பணம் வாங்கிவிட்டால் உங்கள் உரிமைகளை கேட்க முடியாது
மன்னன் அவர்கள் இந்த அணியினருக்கு ஆசி வழங்கச் சொன்னார். நான் ஆசி வழங்கும் அளவிற்கு பெரிய சாமியார் இல்லை. ‘இந்த அணியை உருவாக்கியதே நான்தான்’ என்று இந்த மேடையில் நான் தைரியமாக சொல்கிறேன்.
அதுமட்டுமில்லாமல், இந்தத் தேர்தலில் நான் நின்று வெற்றி பெற்றால் சங்கத்தில் உட்கார்ந்து பணிகளை செய்ய முடியாத நிலையில் என் உடல் தற்போது ஒத்துழைப்பு தராது என்ற காரணத்தினால் நான் நிற்கவில்லை..” என்றார்.
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]