பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம் என்கிற அறிவிப்புடன் கடந்த ஜனவரி 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வரும் நிலையில், தற்போது திடீரென அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக இந்த 24 மணி நேர லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டுள்ளதாக பிக் பாஸ் குழு அந்த லைவ் ஸ்ட்ரீம் வீடியோவிலேயே அறிவித்துள்ளது.
ஒடிடி தளம் என்பதால் இதுபோன்ற பிரச்சனை வருவது சாதாரண விஷயம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, லைவ் கிடையாது என்றும், ஒரு நாள் அல்லது ஒரு சில மணி நேர இடைவெளியில் தான் நிகழ்ச்சி ரன் ஆகும் என்றும் deferred live வீடியோ தான் ஒளிபரப்பாகி வருகிறது என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்!
இது ஒரு புறம் இருக்க, உள்ளே போட்டியாளர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சனையா அல்லது சண்டை ஏற்பட்டு விட்டதா? திடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை வார இறுதியில் நிறுத்தி விட்டு யாரையாவது வெளியே அனுப்ப போகிறார்களா? என ஏகப்பட்ட கேள்விகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்துவை வெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் அவ்வாறு வெளியே அனுப்பினார்கள். அந்த காட்சிகளை ஒளிபரப்பவே இல்லையே என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதற்கான விளக்கத்தை பிக் பாஸ் குழு கொடுக்கும் அல்லது உடல் நலம் சரியில்லாமல் யாராவது வெளியேற்றப்படுவார்கள் என்றும் விளாசி வருகின்றனர்.
மேலும், முதல் வாரத்திலேயே தொழில் நுட்பக் கோளாறு என்றால் 70 நாட்கள் பிக் பாஸ் ஒடிடி தாக்குபிடிக்குமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]