சென்னையில் இடம் சரியாக அமையாத பட்சத்தில் திருச்சியில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.
செங்கல்பட்டில் விளையாட்டு நகரம் அமைக்க இடத்தை தேர்வுசெய்வதில் சிக்கல் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது.. “சென்னையில் இடம் கிடைக்காதபட்சத்தில் திருச்சியில் இடம் தேர்வு செய்து விளையாட்டு நகரம் அமைக்கப்படும். திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.