• Sun. May 5th, 2024

இன்று (நவ.28) முதல் நாகர்கோவில் – பன்வேல் இடையே சிறப்பு ரயில்..!

Byவிஷா

Nov 28, 2023

சபரிமலை சீசனை முன்னிட்டு, நாகர்கோவில் – பன்வேல் இடையே இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் பன்வேலுக்கு இன்று (நவ.28) முதல் ஜன.16-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06075) இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக பன்வேலில் இருந்து நாகர்கோவிலுக்கு நவ.29 முதல் ஜன.17-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06076) இயக்கப்படவுள்ளது.
இதில், 6 குளிர்சாதனப் பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் ஆகியவை இருக்கும். இந்த ரயில் இரணியல், குளித்துறை, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூர், உடுப்பி, ரத்தினகிரி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *