• Sat. Apr 20th, 2024

பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு

Byமதி

Nov 17, 2021

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியாகியிருக்கும் ஆணையில், “பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் வழங்கப்படும்; கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு” என 20 பொருட்கள் அடங்கிய, 1088 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் முதல்வர் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *