திருப்பதியில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ப்ரமோற்சவத்துக்கு தமிழகத்திலிருந்து சிறப்பு பேருந்துகள்இயக்கப்படவுள்ளது.
திருப்பதியில் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெறவுள்ளது. அந்நாட்களில் பெருமாளை தரிசனம் செய்ய தமிழகத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. சென்னை மட்டுமல்லாமல் கன்னியாகுமரி, திருச்சி,சேலம், மதுரை ,கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து மட்டும் 85 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.