சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் பாலியல் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் பாலியல் தரகர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். கை,கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைத்த நிலையில் பாஸ்கரனின் சடலம் பிளாஸ்டிக் கவரில் கட்டி கால்வாயில் வீசப்பட்டது. இது தொடர்பாக கணேசனை போலீசார் கைது செய்தனர். அவதூறாக பேசியதால் பாஸ்கரனை கொன்று உடலை கயிற்றால் கட்டி இருசக்கரவாகனத்தில் தூக்கிச்சென்று கூவத்தில் வீசியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.