• Tue. Apr 16th, 2024

சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வு

ByKalamegam Viswanathan

Mar 31, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளுக்கு குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில், வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் திடீர் ஆய்வு பணிகள் நடைபெற்றது. கோடை காலத்தில் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று மேயர் சங்கீதா இன்பம், அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறினார்.

அணையிலிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணையில் நீர் இருப்பு, குடிநீர் விநியோகம் செய்யும் முறைகள் குறித்து மேயர் கேட்டறிந்தார். அணையின் அருகில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களிடம், அணைப்பகுதியில் குளிக்கவோ, குப்பைகளை கொட்டுவதோ கூடாது என்று மேயர் கூறினார். ஆய்வின் போது, துணை மேயர் விக்னேஷ்பிரியா, மண்டல தலைவர்கள் குருசாமி, சூரியா, அழகுமயில் பொன்சக்திவேல், சேவுகன், மாமன்ற உறுப்பினர்கள் சசிகுமார், கணேசன், ரவிசங்கர், ராஜேஷ், ஜெயராணி, ஜெயினுலாபுதீன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *