சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வணிகரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை 19 படங்கள் வெளியாகி இருக்கின்றது 2013ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், 2016ல் வெளியான ரஜினிமுருகன், படங்களின் வெற்றியை போன்று அதன் பின் வெளியான
வேலைக்காரன் , சீமராஜா ,மிஸ்டர்லோக்கல், ஹீரோ , நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களின் மூலம் கிடைக்கவில்லை வியாபாரம், வசூல் இவற்றை கணக்கில் கொள்ளாமல் பிரம்மாண்ட செலவுகள் தொடர்ந்து தோல்விப்படங்களாக அமைந்தன.
இந்த வருடம் சம போட்டியாளர் இல்லாமல்வெளியான டாக்டர் படம் எதிர்பார்த்ததை காட்டிலும் தமிழகத்தில் தியேட்டர் கல்லாவை நிரப்பியதால் சிவகார்த்திகேயன் படங்களின் வியாபார மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது இவர் ஏற்கனவே இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார் இரண்டு படங்களும் இறுதிக்கட்ட பணிகளை முடிக்கும் கட்டத்தில் உள்ளது முதலில் ‘டான்’ திரைப்படம் வெளிவர இருக்கிறது.இந்த நிலையில், சிவகார்த்திகேயன் 2022 ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,தெலுங்கு இயக்குநர் ‘ஜதி ரத்னலு’ புகழ் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும்இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமன் முதன் முதலாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கு ‘எஸ்.கே 20’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.தெலுங்கு தமிழ் ஆகிய இருமொழிகளிலும் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.டான் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அசோக் இயக்கும் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றும் அது எஸ்கே 20 என்றும் அதற்கடுத்து இந்தத் தெலுங்குப் படத்தில் நடிப்பார் என்றும் அது எஸ் கே 21 ஆக இருக்கும் என்றும் முதலில் தகவல் வெளியானது
2021 நவம்பர் 17 ஆம் தேதி இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அதற்கு, உங்கள் அன்புக்கு நன்றி. பின்றோம் தட்றோம் தூக்கறோம் என்று சொல்லி கூடவே எஸ்கே21 என்கிற குறியீட்டையும் பதிவிட்டிருந்தார் தமன்.
இப்போது, தெலுங்குப்படத்தை எஸ் கே 20 என்று சிவகார்த்திகேயனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பதால் அவர் படங்களின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை விசாரித்தபோது சினிமாவில் தோல்வியில் இருந்து வெற்றி பெற்றுமீண்டுவிடலாம். ஆனால் அதனை தக்கவைத்துக் கொள்ள கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது அதனால் தெலுங்கு – தமிழ் என இரு மொழி படத்தில் நடிப்பதன் மூலம் சம்பளம்கூடும் என்பதுடன் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் அகில இந்திய அளவில் தனக்கரனபுரமோஷன் கிடைக்கும் என்பதாலயே ஏற்கனவே திட்டமிட்ட படங்களின் வரிசைமாறியுள்ளது என்கின்றனர்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]