மதுரைக்கு வருகைதரும் பிரதமர் மோடி, பொங்கல் பரிசாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது…
பிரதமர் மோடி மதுரைக்கு வருவதையொட்டி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று அவருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தேன். அதன்படி மத்திய அமைச்சர்களை அழைத்து பேசி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடிவெடுத்து, மதுரைக்கு வரும் பிரதமர் பொங்கல் பரிசாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.
விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்களுடன் மோடியின் பெயரை இணைத்து கொண்டாடுவார்களா? அப்படியிருக்கையில் தமிழர்கள் மட்டும் என்ன? ‘மோடி பொங்கல்’ என கொண்டாடுவதற்கு?
தை மாதத்தில் கொண்டாட வேண்டிய பொங்கலை மார்கழி மாதத்தில் கொண்டாடுவது போன்று காமெடி எதுவும் இல்லை. விளம்பரத்திற்காக இதை செய்கிறார்களா என்பது தெரியவில்லை. தைப்பொங்கலை மார்கழியில் நடத்திவிட்டு அதற்குப் பெயர் ‘மோடி பொங்கல்’ என்று கூறுவது மிக வருத்தமான செயல் என்றவரிடம்…
சிவகாசி வெடி விபத்து குறித்து?
பட்டாசு தொழில் பாதுகாப்பான தொழிலாக இருக்க வேண்டும். ஏழை தொழிலாளிகள் உயிரிழப்பது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை அதிகாரிகள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அதேபோல இந்த தொழில் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டும்.
மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வரும்?
இது குறித்து ஜப்பான் பிரதமரிடமும், ஜைக்கா நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும். அவர்களே தெளிவாக கூறி விட்டார்கள், 2026-ல் கட்டி முடிக்கப்படும் என்று. அதனால் நாம் 2026 வரை எய்ம்ஸுக்காக காத்திருக்க வேண்டியது நமது கடமை. எனவே ஜப்பான் பிரதமரையும், ஜைக்கா நிறுவனத்தையும் நம்புவோம்; மோடியையும், மோடி அரசையும் நம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அதேபோல் ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வு அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் எதிர்ப்புகளுக்கு இணங்க தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை வாபஸ் பெற வேண்டியது இந்த கவுன்சிலின் கடமையாக இருக்கும். இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்வார் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.
- குறள் 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் […]
- இன்று முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் நினைவு நாள்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) நினைவு நாள் […]
- மகளிர் காவல்துறை பொன்விழா நெல்லை வந்த சைக்கிள் பேரணிக்கு உற்சாக வரவேற்புதமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை […]
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான […]
- பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு..!பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் […]
- மதுரையில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படகண்காட்சிதமிழ்நாடு முதலமைச்சர் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சியினை, பள்ளி கல்வித்துறை […]
- நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..!தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று […]
- ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைமதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை துவங்கபடுகிறது.மதுரை விமான […]
- இன்னோசன்ட் காலமானார்இந்திய சினிமாவில்ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த பிரபல மலையாளகுணசித்திர நடிகர் இன்னோசன்ட்(75) நேற்று மாலை திருவனந்தபுரத்தில்(27.03.2023) […]
- ஜெயலலிதாவை முன் வைத்து சசிகலா நடத்திய அரசியலை சொல்லும் ‘செங்களம்’எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள புதிய இணையத் தொடர் ‘செங்களம்’.இந்த இணையத் தொடரில் […]
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]