• அன்பு தலைமுடியைப் போன்றது.
வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும்.
• பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி
ஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
• எதிரியை அலட்சியம் செய்தால்
அவனைவிட உயர்ந்தவன் ஆவோம்.
• மது, மாது, சூது ஆகியவை செல்வத்தைச் சுருக்கி
தேவைகளைப் பெருக்குகின்றன.
• தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்.