லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார்
தயாரித்திருக்கும் படம்
இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் இருவரும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகர் மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா., மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா, ‘மைக்செட்’ அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி.துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி இயக்கத்தை போனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார். அறிமுக இயக்குநரான பி.என்.விக்னேஷ் ஷா இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
மிர்ச்சி சிவா படத்திற்கு போனால் காமெடி எதிர்பார்க்கலாம். ஆனால் லாஜிக் எதிர்பார்க்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. இப்படத்திலும் அப்படியே ஆனால், என்னவொன்று இதில் காமெடியும் இல்லை என்பது நமது துயரம்தான்.
சிங்கிள் பசங்களுக்காக ஆர்ட்டிபிஷல் இன்டலிஜன்ட் மூலம் செல்போன் ஒன்றை தயாரிக்கிறார் ஷாரா. அந்த செல்போனை திருடர்கள் திருடிச் சென்று விடுகின்றனர்.
இந்த நிலையில் உணவு டெலிவரி வேலை செய்யும் நாயகன் சிவாவிடம் அந்த போன் கிடைக்கிறது. அதன் பிறகு சிவாவின் தேவைகளை அந்த செல்போன் நிறைவேற்றுகிறது.
ஒரு கட்டத்தில் அந்த செல்போன் சிவாவிடம் தனது காதலை சொல்கிறது. ஆனால் நீ உண்மையான பெண் கிடையாது என்று அதனை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திரமடையும் அந்த இயந்திரம் சிவாவின் வாழ்வில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இறுதியில் அந்த குழப்பங்கள் நீங்கி சிவாவின் வாழ்வில் ஒளி பிறந்ததா என்பதே கதை.
சிவா வழக்கம்போல தனக்கு என்ன வருமோ அதனை செய்துள்ளார். ஆங்காங்கே அவரது நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. மற்றபடி ஒன்றுமில்லை. மேகா ஆகாஷ், செல்போன் அழகியாக ஜொலிக்கிறார்.
அவரது குட்டி, குட்டி முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. அஞ்சு குரியன் அழகான காதலியாக வந்து போகிறார். மாகாபா , திவ்யா கணேஷ், மனோ அனைவரும் கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர்.
ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா வொர்க் மிகப் பெரிய பட்ஜெட் படம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளது. கலர்புல் காட்சிகளில் குறைவில்லை. லியோன் ஜேம்ஸின் இசையில் ‘ஸ்மார்ட்போன் சென்யோரிட்டா’ பாடல் மட்டுமே முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாகவே வந்திருக்கிறது.
‘எந்திரன்’ படத்தை கலாய்ப்பது போன்ற சில இடங்கள் நமக்கு போரடிக்கிறது. படத்தில் காமெடியைத் தாண்டி எதுவுமில்லை என்பதால் காமெடி சீன் அடுத்து எப்போ வரும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.
இதில் போதாக்குறைக்கு உருவக் கேலி செய்யும் வசனங்களும், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பற்றிய உண்மைகளை உள்ளதுபடி சொல்லத் தெரியாமல் சொதப்பி வைத்திருப்பதும் படத்திற்கு மைனஸ் பாயிண்ட்டாகிவிட்டது.
படத்தின் தொடக்கத்திலேயே “இப்படத்தில் லாஜிக் பார்க்க வேண்டாம்” என்று ஸ்லைடு போடுகின்றனர். சிவா படத்துக்கு வந்தால் ரசிகர்களே லாஜிக் பார்க்கவே மாட்டார்கள். ஆனால் காமெடி படத்துக்கு தேவையான கதையைக் கையில் வைத்துக் கொண்டு திரைக்கதையில் சொதப்பி வைத்துள்ளனர். இன்னும் கொஞ்சம் காமெடிக்கு மெனக்கெட்டு இருந்தால் ஓகே படமாகவாவது வந்து இருக்கும்.

- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]