ரெயில்களிலும் அதிக லக்கேஜ் கொண்டுசென்றால் தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
பேருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்குமேல் குறிப்பாக பெட்டிகளில் பொருட்கள் எடுத்துச்சென்றால் தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரயில்களில் அதுபோன்ற விதிமுறை இருந்தும் இதுவரை ரெயில்வே நிர்வாகம் இதுவரை அதனை செயல்படுத்தியதில்லை ஆனால் தற்போது அந்த விதி முறை செயல்பாட்டுக்கு வர இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதல் வகுப்பு ஏசி முதல் 2-ம் வகுப்பு சாதாரண படுக்கை வசதி வரை உள்ள பயணிகளுக்கு எத்தனை கிலோ ‘லக்கேஜ்’ கொண்டு செல்லலாம் என்று விதிமுறை உள்ளது.
ஆனால் அதனை இதுவரை ரெயில்வே நிர்வாகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது ‘லக்கேஜ்’ அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரெயில்களில் சமீப காலமாக ‘சங்கிலி’ இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், சக பயணிகள் சிரமப்படுவதை மனதில் வைத்து அதிக அளவு உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என எச்சரித்துள்ளது.பயணத்தின் போது அதிக அளவு உடைமைகளுடன் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் போது இன்பம் பாதியாக இருக்கும். அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.ஏ.சி. முதல் வகுப்பில் 70 கிலோ, ஏ.சி. 2-வது வகுப்பு 50 கிலோ, ஏ.சி. 3-வது வகுப்பு 40 கிலோ வரை ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்லலாம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.மேலும் யாரேனும் அதிக உடைமைகளுடன் பயணிப்பதை கண்டறிந்தால் தனி கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும். இது பயண தூரத்துக்கு ஏற்பமாறுபடும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.
- போலீசாரை மிரள வைத்த காதல் மன்னன் காசி..!ஆபாச வீடியோக்கள்.. நிர்வாண போட்டோக்கள்.. என போலீசாரை மிரள வைத்துள்ளான் கன்னியாகுமரியை சேர்ந்த காதல்மன்னன் காசி.கன்னியாகுமரி […]
- புதிய பொருளாளர் தேர்வுசெய்யப்படுவார் – கே.பி.முனுசாமிஅதிமுக பொதுக்குழுவில் புதிய பொருளாளர் தேர்வு செய்யப்படுவார் என கிருஷ்ணகிரியில் கே.பி முனுசாமி பேட்டிகிருஷ்ணகிரி மாவட்ட […]
- செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்…செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது என்பதும் இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று […]
- திரௌபதி முர்மு சென்னை வருகைபா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு 2-ந்தேதிகூட்டணி கட்சியினரை சந்திக்க சென்னை வருகிறார்.இந்திய ஜனாதிபதி தேர்தல் […]
- முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி…இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]
- இன்று உலக கைக்குழுக்கல் தினம்இன்று உலக கைக்குழுக்கல் தினமாக கொண்டாடபபடுகிறது. புதிய நண்பரை சந்திக்கும் போது ,அல்லது நீண்டகாலத்திற்கு பின் […]
- சினிமாவைவிட்டு விலகும் அசாசுர நடிகர் நாசர்..கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக, நடிப்பில் இருந்து நடிகர் நாசர் விலக […]
- பல் துலக்காமல் முத்தம்- மனைவி கொலைகேரளாவில பல்துலக்காமல் முத்தம் கொடுத்த பிரச்சனை மனைவியை கணவர் கொலை செய்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.கேரள […]
- அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு..,
ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் […] - அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களுக்குத் தடை..!தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக […]
- மகாராஷ்டிராவில் நாளை முதல்வராகிறார் தேவேந்திரபட்னாவிஸ்மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்ரே பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 1) பா.ஜ.க.வின் […]
- அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..உலகின் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் […]
- விண்வெளியில் ஒருகொடூரமான நரகம்- புதிய கிரகம் கண்டுபிடிப்புசூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்சோ பிளானட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானட் […]
- சமையல் குறிப்புகள்ராஜ்மா கிரேவி: தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 5, இஞ்சி – ஒரு துண்டு, […]
- படித்ததில் பிடித்தது1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும். 3.அடக்கமான இதயம் […]