காங்கிரஸ் கட்சி புத்துயிர்பெற மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி உட்கட்சிதேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குஜராத், இமாச்சல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் பேரவைத் தேர்தலும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் 3 நாள் மாநாடு நடைபெறும் என காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்தது. இதில், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த சூழலில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது, “கட்சிக்குள் உள்ள குறைகளை மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டலாம். ஆனால், அது தன்னம்பிக்கை, மன உறுதியை சீர்குலைக்கும் வகையில் இருக்கக்கூடாது. கட்சியில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். அரசியல், பொருளாதாரம், சமூக நீதி, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் கட்சி விவகாரம் ஆகிய 6 அம்சங்கள் குறித்து வரைவு அறிக்கை தாக்கல்செய்ய தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவின் அறிக்கை பற்றி உதய்பூர் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கட்சிக்கு புத்துயிரூட்டவும் ஒற்றுமையை உறுதி செய்யவும் உதய்பூர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
- பீகார் மாணவிகள் நாகர்கோவிலில் கல்வி பயில்வது தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு -தமிழிசைபீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய […]
- ஏப்ரல் 1ம் தேதி ஆளுநர் ஆர்என்.ரவி ராஜபாளையம், சிவகாசிக்கு வருகைவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து […]
- முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.தென் தமிழ்நாட்டில் […]
- மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் […]
- நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
- மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக […]
- ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் […]
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுஉக்ரைன் மற்றும் […]
- ராமதாஸின் நிலைப்பாட்டை தவிர்க்க கோரிக்கைதமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் அதனை மையிட்டு அழிப்போம் என […]
- நெருக்கமாக நடிக்க என்ன காரணம் அம்மா நடிகையின் வாக்குமூலம்“தெலுங்கு நடிகை சனா. சுமார் 200 படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். நடிகை சனாவின் முழுப் […]
- மேற்கத்திய நாடுகளில் இசை கச்சேரி நடத்தும் யுவன்சங்கர்ராஜாசமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் […]
- ஜப்பானில் – ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஜப்பானில் நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. கடும் நிலநடுக்கத்தால் […]
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]