ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த சீமான். பெட்ரோல் குண்டுகள் வீச்சு உள்ளிட்ட காரணங்களால் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் மனதில் மதவெறியைத் துண்டி , தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டுருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி . இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.