தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், டெல்லியே அலறுமளவுக்கு கோவையின் கூத்துகள் அரங்கேயிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆமாம். இந்தியாவிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு பணம் விளையாடியுள்ளது அங்கே! என்கிறார்கள். அட ஒரு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவ்வளவு பணம் விளையாடியிருந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனால் வார்டு எலெக்ஷனுக்காக இப்படி வாரி இறைத்துள்ளார்களே என்று மக்கள் ஆதங்கப்படும் நிலையும் அங்கு நிலவி வருகிறது. மாநகராட்சியின் ஒரு வார்டில் ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் வரையில் கூட கொடுக்கப்பட்டதாக உளவுத்துறை போலீஸ் சொல்கிறது. இதுமட்டுமல்லாமல், சில இடங்களில் கையில் நூறு நூற்றைம்பது வாக்குகளை வைத்திருப்போருக்கு ஆப்பிள் போன் வாங்கிக் கொடுத்த கூத்தும் நடந்துள்ளது.
இதனால் ‘எனக்கான மரியாத போச்சேடா உங்களால’ என்று விவேக் லெவலில் புலம்பிக் கண்ணீர் வடிக்கிறது சட்டமன்ற தேர்தல்! என்று நெட்டிசன்கள் வெச்சு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் மீம்ஸில்.
ஒட்டு மொத்தமாக கோவை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பதவிகளுக்காக போட்டியிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் செய்த செலவை கூட்டிப்பார்த்தால் தமிழ்நாட்டில் மினி பட்ஜெட்டே போட்டுவிடலாம்! என்கிறார்கள். அரசியல் பார்வையாளர்கள். ஆனால் அதேவேளையில், வாக்குபதிவு நாளன்று இந்த காஸ்ட்லி வேட்பாளர்களுக்கு ரிவிட் வைத்துவிட்டனராம் வாக்காளர்கள். அதாவது கோயமுத்தூர் மாநகராட்சியில் மொத்தம் பதினைந்து லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூற்று ஐம்பத்து எட்டு வாக்காளர்கள் உள்ளனராம். இவர்களில் வாக்களித்தோர் வெறும் எட்டு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து நூற்று ஒன்பது பேர்தானாம். அதாவது 54 சதவீதம் கூட வாக்குபதிவு நடக்கவில்லை. ஓட்டுப்போட வராதோரில் பெண்களின் சதவீதமும் குறைவுதானாம்!
இதனால், மிக கடுமையான மன கவலையில் உள்ளனராம் காசை அள்ளி வீசிய வேட்பாளர்கள். ஏனென்றால் பெண்கள்தான் பணம் வாங்கினா, நன்றியோடு ஓட்டு போடுவார்கள் என்று அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் அள்ளி அள்ளி தந்தனராம் இந்த முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் பல லட்சங்கள் செலவாம். ஆனால் இப்படி வாக்குப்பதிவு மந்தமாகி, அதிலும் பெண்கள் குறைவாகவே வாக்குப்பதிவுக்கு வந்ததால் மிரண்டு கிடக்கின்றனர். எனவே பெரிய அளவு வித்தியாசத்தில் வெற்றியோ தோல்வியோ இருக்கப்போவதில்லை. இழுத்துப் பிடித்து ஒன்றிரண்டு, பத்துப் பதினைந்து வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்வி இருக்கும். எனவே அத்தனை பேருக்கும் உயிர் போய்தான் திரும்பும்! என்கிறார்கள்.
கெத்தாக காசை அள்ளி வீசிய வேட்பாளர்களை நோக்கி ‘என்ன சோனமுத்தா! மனசுக்குள்ளே கவலை ரிங்ங்ங்ங்ன்னு சுத்துதா?’ என்று வடிவேலு ஸ்டைலில் கிண்டலடிக்கின்றனர் மற்ற ஏழை வேட்பாளர்கள்.
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]
- புதிய கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை […]
- முகம் வெள்ளையாக:பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் […]
- மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி […]
- காலிஃப்ளவர் மசாலா:தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது […]
- பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டுவிட்பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் […]
- சிந்தனைத் துளிகள்• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் […]
- பொது அறிவு வினா விடைகள்1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் […]
- குறள் 214:ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் […]
- இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார்- பாஜக தலைவர்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை இந்திய மக்களை பிரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். […]
- மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து […]