தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், டெல்லியே அலறுமளவுக்கு கோவையின் கூத்துகள் அரங்கேயிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆமாம். இந்தியாவிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு பணம் விளையாடியுள்ளது அங்கே! என்கிறார்கள். அட ஒரு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவ்வளவு பணம் விளையாடியிருந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனால் வார்டு எலெக்ஷனுக்காக இப்படி வாரி இறைத்துள்ளார்களே என்று மக்கள் ஆதங்கப்படும் நிலையும் அங்கு நிலவி வருகிறது. மாநகராட்சியின் ஒரு வார்டில் ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் வரையில் கூட கொடுக்கப்பட்டதாக உளவுத்துறை போலீஸ் சொல்கிறது. இதுமட்டுமல்லாமல், சில இடங்களில் கையில் நூறு நூற்றைம்பது வாக்குகளை வைத்திருப்போருக்கு ஆப்பிள் போன் வாங்கிக் கொடுத்த கூத்தும் நடந்துள்ளது.
இதனால் ‘எனக்கான மரியாத போச்சேடா உங்களால’ என்று விவேக் லெவலில் புலம்பிக் கண்ணீர் வடிக்கிறது சட்டமன்ற தேர்தல்! என்று நெட்டிசன்கள் வெச்சு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் மீம்ஸில்.
ஒட்டு மொத்தமாக கோவை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பதவிகளுக்காக போட்டியிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் செய்த செலவை கூட்டிப்பார்த்தால் தமிழ்நாட்டில் மினி பட்ஜெட்டே போட்டுவிடலாம்! என்கிறார்கள். அரசியல் பார்வையாளர்கள். ஆனால் அதேவேளையில், வாக்குபதிவு நாளன்று இந்த காஸ்ட்லி வேட்பாளர்களுக்கு ரிவிட் வைத்துவிட்டனராம் வாக்காளர்கள். அதாவது கோயமுத்தூர் மாநகராட்சியில் மொத்தம் பதினைந்து லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூற்று ஐம்பத்து எட்டு வாக்காளர்கள் உள்ளனராம். இவர்களில் வாக்களித்தோர் வெறும் எட்டு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து நூற்று ஒன்பது பேர்தானாம். அதாவது 54 சதவீதம் கூட வாக்குபதிவு நடக்கவில்லை. ஓட்டுப்போட வராதோரில் பெண்களின் சதவீதமும் குறைவுதானாம்!
இதனால், மிக கடுமையான மன கவலையில் உள்ளனராம் காசை அள்ளி வீசிய வேட்பாளர்கள். ஏனென்றால் பெண்கள்தான் பணம் வாங்கினா, நன்றியோடு ஓட்டு போடுவார்கள் என்று அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் அள்ளி அள்ளி தந்தனராம் இந்த முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் பல லட்சங்கள் செலவாம். ஆனால் இப்படி வாக்குப்பதிவு மந்தமாகி, அதிலும் பெண்கள் குறைவாகவே வாக்குப்பதிவுக்கு வந்ததால் மிரண்டு கிடக்கின்றனர். எனவே பெரிய அளவு வித்தியாசத்தில் வெற்றியோ தோல்வியோ இருக்கப்போவதில்லை. இழுத்துப் பிடித்து ஒன்றிரண்டு, பத்துப் பதினைந்து வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்வி இருக்கும். எனவே அத்தனை பேருக்கும் உயிர் போய்தான் திரும்பும்! என்கிறார்கள்.
கெத்தாக காசை அள்ளி வீசிய வேட்பாளர்களை நோக்கி ‘என்ன சோனமுத்தா! மனசுக்குள்ளே கவலை ரிங்ங்ங்ங்ன்னு சுத்துதா?’ என்று வடிவேலு ஸ்டைலில் கிண்டலடிக்கின்றனர் மற்ற ஏழை வேட்பாளர்கள்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]