நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மதுரை மாநகராட்சியில் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால் அக்கட்சிக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் கொங்கு மண்டலம் மற்றும் தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மதுரை மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் காட்டிய மெத்தனம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அக்கட்சி தலைமைக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, பாஜக உடனான கூட்டணி முறிவால் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் அதிமுகவே நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் களத்தில் நிறுத்தப்படும் முன்பாக தேர்தலுக்கு நன்றாக செலவு செய்ய வேண்டும். பணமில்லை என்ற சலசலப்புகள் ஏதும் வரக்கூடாது என்று கட்சி தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.
அதனை ஏற்று அதிமுக வேட்பாளர்களும் செலவிற்காக எடுத்து வைத்த பணத்தை முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூவிடம் கணக்கு காட்டியுள்ளனர். அவரும் தேர்தல் வேலைகள் படுஜோராக நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்த அதிமுகவினர், நிலைமை தங்களுக்கு சாதகமாக இல்லை என்று புரிந்து கொண்டுள்ளனராம்.
உடனே எடுத்து வந்த பணத்தை ஏன் வாரி இறைக்க வேண்டும்? ஓரளவு மட்டும் செலவு செய்வோம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர். இதனால் ஒருசில அதிமுக வேட்பாளர்களை தவிர மற்றவர்கள் கரன்சி விஷயத்தில் அடக்கியே வாசித்துள்ளனர். இதுபற்றி மதுரை மாவட்ட அதிமுக தலைமைக்கும், கட்சி தலைமைக்கும் தகவல் சென்றுள்ளது. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
கரன்சி விஷயத்தில் தாராளமாக செயல்பட்டிருந்தால் எப்படியும் வெற்றி வாகை சூடியிருக்கலாம் என்று புலம்பல்கள் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. எனவே மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டதா? என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். என்ன அவசரம்? இன்னும் ஒருநாளில் ஒட்டுமொத்தமாக முடிவுகள் வெளியாகிவிடும். அதன்பிறகு யார் எப்படி வேலை பார்த்தார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும் என்கின்றனர்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]