• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி..,

ByP.Thangapandi

Feb 11, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 200 க்கும் அதிகமான மாணவ மழலைகள் தங்களது படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்.,

நீர் சுத்திகரிப்பு, ராக்கெட், காற்றாலை, லிப்ட், எக்ஸ்லைட்டர் உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகள் மற்றும் மரம் வளர்ப்பதன் நன்மைகள் குறித்தும் காட்சியில் வைத்திருந்தனர்.,

உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராதிகா இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் படைப்புகளை கண்டு ரசித்ததோடு, தங்கள் படைப்புகள் குறித்து விளக்கம் அளித்த மாணவ மழலைகளை கண்டு ஆச்சரியமடைந்து வாழ்த்தி, பாராட்டினார்.,