கோவையில் ஓட்டுக்கு கொலுசு கொடுக்கும் புதிய கலாச்சாரத்தை திமுகவினர் தொடங்கி வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் முகாமிட்டிருக்கும் கரூர்காரர்கள் இன்னும் 10 நாட்களில் ஊருக்கு போய்விடுவார்கள் என்றும், மேயர் பதவி தொடங்கி பேரூராட்சி தலைவர் பதவி வரை அதிமுக தான் கைப்பற்றப் போகிறது என சவாலே விடுத்தார். இதேபோல் காலம் இப்படியே இருந்துவிடாது என்றும் நிச்சயம் மாறும் என்பதை மனதில் வைத்து காவல்துறையினர் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோபம் காட்டினார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கோவை சிவானந்தா காலனி பகுதியில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை காவல்துறையினர் திமுகவினரை போலவே செயல்படுவதாகவும் காலமும், சூழலும் நிச்சயம் மாறும் எனவும் தெரிவித்தார். கரூரிலிருந்து கொலுசுடன் வந்திறங்கியுள்ள திமுகவினர், கோவையில் வீடு வீடாக கணக்கெடுத்து பணத்தையும், கொலுசுகளையும் கொடுத்து வெற்றிபெற்று விடலாம் என நினைப்பதாக பேசினார்.
கோவை மக்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தவறாக எடை போட்டுவிட்டார் என்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிமுகவே வெற்றிபெறும் எனவும் சவால் விடுத்தார் எஸ்.பி.வேலுமணி. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கிடப்பில் போட்டு வருவதாகவும் வழக்குகளால் தன்னையும் அதிமுக நிர்வாகிகளையும் அச்சுறுத்திவிடலாம் என அவர் எண்ணுவதாகவும் சாடினார் எஸ்.பி.வேலுமணி.
கோவையில் திமுகவினர் எந்த வேலையும் செய்யாமல் பணத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி தேர்தலை சந்திப்பதாகவும் அதிமுகவினர் தேர்தல் முடியும் வரை தூக்கத்தை துறந்து பணியாற்ற வேண்டும் எனவும் பேசினார். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என கூட்டத்தில் இருந்தவர்களுக்கு தைரியம் கூறிய எஸ்.பி.வேலுமணி, கோவைக்கு அதிமுக ஆட்சியில் என்னென்ன செய்தோம் என்பதை எடுத்துக்கூறி வாக்குகேட்குமாறு அறிவுறுத்தினார்.
அண்மை நாட்களாக கோவை காவல்துறையினர் மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து காரசாரமான முறையில் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பரப்புரையின் போது பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]
- மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – அமைச்சர் தகவல்சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுரத்து செய்யப்படுவதாக […]
- வீடியோ கேமுக்கு அடிமையான மாணவன் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்த கும்பல்கேரளாவில் வீடியோ கேமுக்கு அடிமை; இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவனை தற்கொலை செய்ய வைத்த கும்பல்கேரள […]