நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்துள்ளார்.
ஒருமணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரிக்கப்பட்டது எனவும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தார் எனவும் தெரிகிறது.