நடிகை கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடித்துள்ள திரைப்படம் சாணி காயிதம். இதுவரை இயக்குனராக இருந்த செல்வராகவன் முதல் முறையாக நடிகராக திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகிறார். ராக்கி படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்க இப்படம் மார்ச் மாதத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக தங்கை வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார்.
விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ராவான கேங்க்ஸ்டர் திரைப்படம் ராக்கி . இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார் ராக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக சாணி காயிதம் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாக உள்ளார்!
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இந்த படத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே தெரிய வந்தது. இந்நிலையில் சாணி காகிதம் மார்ச் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற லேட்டஸ்ட் தகவல் தற்போது கிடைத்துள்ளது.
- மதுரை – தேனி புதிய அகல ரயில்பாதை திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் – பிரதமர் […]
- தும்பை விட்டு வாலைப்பிடிக்கிறார் ஸ்டாலின் -செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டுதும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தற்போது […]
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]
- குறள் 215:ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், […]
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]