பிப்ரவரி 25ம் தேதி ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள கங்குபாய் கத்தியவாடி படம் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். மும்பையின் மாஃபியா குயின் கங்குபாய் பயோபிக் படத்திற்கு எதிராக கங்குபாயின் வளர்ப்பு மகன் கடுங்கோபத்தில் உள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாம்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் அடுத்தடுத்து இரு பிரம்மாண்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி உள்ள கங்குபாய் கத்தியவாடி படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 25ம் தேதி கங்குபாய் கத்தியவாடி வெளியாக உள்ள நிலையில், அடுத்த மாதம் மார்ச் 25ம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள RRR படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்திலும் ஆலியா பட் நடித்துள்ளார். இந்தியாவின் இரு பெரும் இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள ஆலியா பட் அடுத்தடுத்து இரு படங்களையும் ரிலீஸ் செய்து பாலிவுட்டில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க காத்திருக்கிறார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவு காரணமாக பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட்டுக்கு எதிராக போர்க் குரல் எழுப்பி வந்த நிலையில், மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட் நடித்த சடாக் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இந்த இரு படங்களும் ஆலியா பட்டுக்கு வெற்றியைத் தேடித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கங்குபாயின் வளர்ப்பு மகன் கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு எதிராக பிரச்சனைகளை கிளப்பி வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் ரெட் லைட் ஏரியாவில் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்களின் துயர் துடைத்த எங்க அம்மாவை விலைமகளாக இந்த படத்தில் மாற்றி விட்டனர். புத்தகம் எழுதும் போதும் சரி படமாக எடுக்கும் போதும் சரி சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை இந்த சினிமாக்காரங்க வாங்குவதே இல்லை என கங்குபாயின் வளர்ப்பு மகன் மற்றும் மகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருவது திட்டமிட்டபடி இந்த படம் வெளியாவதில் சிக்கலை உருவாக்குமா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]