தேவையான பொருட்கள்: அரிசி – ஒரு டம்ளர், துவரம் பருப்பு – முக்கால் டம்ளர், சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 4, பூண்டு – 6 பல், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கத்தரிக்காய் – 2, உருளைக்கிழங்கு – 1, கேரட் – 1, முருங்கைக்காய் – 1, பீன்ஸ் – 5, தனியா – 3 ஸ்பூன், வரமிளகாய் – 7, சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் ஒரு கப் அரிசி மற்றும் முக்கால் கப் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் தனியா, 7 வரமிளகாய், அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு, அதனை ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைக்க வேண்டும்.
பிறகு 4 தக்காளி மற்றும் காய்கறிகளை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் குக்கரை அடுப்பின் மீது வைத்து, 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு பொடி செய்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்து ஒரு முறை கலந்து விடவேண்டும்.
பின்னர் இவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் குக்கர் மூடியைப் போட்டு, 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து ஒரு ஸ்பூன் நெய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பரிமாறி கொடுத்தால் போதும். ஹோட்டலில் செய்யும் அதே பக்குவத்தில் அற்புதமாக இருக்கும்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]