இஞ்சி சட்னி
தேவையானவை: சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 4, இஞ்சி துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் – 4, உப்பு – தேவையான அளவு, பொடித்த வெல்லம் – ஒரு ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.
செய்முறை: முதலில் ஒரு கொத்து இஞ்சியை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் பூண்டு சேர்க்கும் பொழுது தோலுடன் சேர்த்துக் கொள்வார்கள் அதில் பிரச்சினை இல்லை. தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளுடன், 4 பூண்டு பற்களை தோலுரித்து நறுக்கி சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்கு சிவக்க வறுத்த உடன் வர மிளகாயை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து லேசாக உப்பி வர வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை தனியே எடுத்து ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதே எண்ணெயில் வெட்டி வைத்துள்ள இஞ்சி துண்டுகள் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக சுருள நன்கு வதக்கிய பின்பு, அதையும் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்துள்ள பொருட்களுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொரகொரவென்று ஒரு சுற்று சுற்றி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். சட்னிக்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். கெட்டியாக அரைத்த பின்பு இதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து அரைக்க வேண்டும். இஞ்சி சட்னிக்கு வெல்லம் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். எனவே இதனை தவிர்த்து விடாதீர்கள்! வெல்லம் சேர்க்கும் பொழுது தான் இஞ்சி சட்னி சுவையாக இருக்கும். பிறகு இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். தாளிக்க ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொட்ட வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த ஆரோக்கியம் நிறைந்துள்ள இஞ்சி சட்னியை இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]