• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்பு

Byகாயத்ரி

Mar 30, 2022

பானை ப்ரினி

தோவையான பொருட்கள்:

• 1/2 லிட்டர் பால்
• 1 கப் லேசாக தூளாக்கப்பட்ட அரிசி
• தேவையான அளவு சுண்டக்காய்ச்சிய பால்
• தேவையான அளவு சீனி
• தேவையான அளவு கோயா
• தேவையான அளவு உதிர்ந்த பாதாம்
• தேவையான அளவு குங்குமப்பூ
• தேவையான அளவு சில்வர் வார்க்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். அதில் சிறிது குங்குமப்பூவும் சேர்த்து பால் திக்காகும் வரை கொதிக்க விட வேண்டும். பால் திக்கானதும் அதில் ரவை சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். குறைந்தது 8 -10 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது. இப்போது சர்க்கரை சேர்க்காத கோயா மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளற வேண்டும். திக்காக ஆரம்பிக்கும் கட்டிகள் வராமல் கைவிடாமல் கிளற வேண்டும். இப்போது சுவைக்குத் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொண்டு மிதமான தீயில் வேகவிடவும். திக்காக திக்கான பாத்திரத்தின் அடியில் அடி பிடிக்க ஆரம்பிக்கும். கை விடாமல் கிளற வேண்டும். பாத்திரத்தில் திரண்டு பிரினி பதத்துக்கு வந்த பிறகு, அடுப்பை அணைத்து விட்டு குளிர வையுங்கள். இப்போது இதை சின்ன மண் பானைகளில் போட்டு மேலே அலுமினியம் ஃபாயில் பேப்பர் போட்டு மூடி ப்ரிட்ஜில் ஃப்ரீசரி்ல வைத்து விடுங்கள். சாப்பிடும் போது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து பரிமாறலாம்.