நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வென்றது. அதேபோல நடைபெற உள்ள மாநகராட்சித் தேர்தலிலும் சேலம் மாநகராட்சியைக் கைப்பற்றி தீருவது என்ற வியூகத்தில் இருக்கிறார் முன்னாள் முதல்வரும் சேலம் மாவட்டத்துக்காரருமான எடப்பாடி பழனிசாமி.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த அளவுக்கு எம்.எல்.ஏக்கள் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு திமுக எம்.எல்.ஏ தான் வெற்றி பெற்றார்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் திமுகவின் சேலம் மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்பிறகு செந்தில் பாலாஜியை கோவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்துவிட்டு சேலம் மாவட்டத்துக்கு முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவை நியமித்துள்ளார். இப்போது கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு சவாலாக உள்ளவை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டமான சேலம், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மாவட்டமான கோவை! இவை இரண்டு தான்!
இதனால் அமைச்சர் நேரு திருச்சியிலும் சேலத்திலுமாக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். பொறுப்பாளரான அமைச்சர் நேரு எடுக்கும் முடிவுக்கு மாவட்டச் செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் சரியான ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்கின்றனர் சேலம் திமுக நிர்வாகிகள்.
மாவட்டச் செயலாளரின் எதிர்ப்பை மீறி ஏழு வார்டுகளுக்கு வீரபாண்டியார் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் நேரு. மற்ற வார்டுகளுக்கு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் எம். பி எஸ்.ஆர்.பார்த்திபன் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சியை இந்த முறை அதிமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற வேகத்தோடு வியூகங்களை அமைத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் உலாவும் தகவல்கள்…
சேலம் மாநகராட்சி மொத்தம் 60 வார்டுகளில், அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய சில வார்டுகள் உள்ளன. அடுத்ததாக திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துள்ள 12 வார்டில் குறிவைத்து ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார் எடப்பாடி.
மேலும், திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் 48 வார்டுகளில் 25 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் பலவீனமானவர்கள் என்று கணித்துள்ளார் எடப்பாடி. இந்த 25, திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 12, அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என நினைக்கக்கூடிய 10 ஆக சுமார் 50 வார்டுகளில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளார் எடப்பாடி.
இதற்காக ஒரு வார்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர். சேலம் மாநகராட்சியில் அதிமுக ஜெயிப்பது கட்சிக்கான கௌரவம் என்பதைவிட தனது சொந்த இமேஜ் ஆகவே இதைப் பார்க்கிறார் எடப்பாடி. எனவே சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் அதிகபட்சமாக தலா 50 லட்சம் வீதம் 30 கோடி ரூபாய் வரை செலவு செய்ய அதிமுக முடிவு செய்து களம் இறங்கிவிட்டது. எடப்பாடியா, ஸ்டாலினா என்று பார்த்து விடுவோம்” என்கிறார்கள் சேலம் அதிமுகவினர்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]