உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் தெற்கில் அமைந்துள்ள கெர்சன் நகரத்தில் 3 லடசம் பேர் வசிக்கின்றனர். இங்கு புகுந்த ரஷ்ய படையினர் கொள்ளையடிப்பதில் குறியாக இருந்தனர்.இது போக மின்சாரம் மற்றும் குடிநீரும் நிறுத்தப்பட்டிருந்தது. இது உக்ரைனின் வேலை என ரஷ்யாவும் இதை செய்தது ரஷ்யாதான் என உக்ரைனும் மாறிமாறி குற்றம் சாட்டின. இந்நிலையில் கெர்சனிலிருந்து படைகளை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டள்ளது.