

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எங்களிடம் கேட்டபடி, பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரமும், செங்கரும்பு தொகுப்பும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விடியா அரசு, பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த செய்திக் குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தைப்பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்புதான். இந்த விடியா அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம் பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. பொது மக்களிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழகமெங்கும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதலமைச்சர் அவர்கள், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த தைப் பொங்கலுக்கு 5,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

- வரலாறு படைத்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!உத்தராகண்ட்: உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- இந்தியாவில் முதன் முறையாக கோவையில் “பிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” அதிநவீன தொழில்நுட்பம்…உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிப்பதாக ஜப்பானை… Read more: இந்தியாவில் முதன் முறையாக கோவையில் “பிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” அதிநவீன தொழில்நுட்பம்…
- இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி காளவாசல் அருகில் உசிலம்பட்டியிலிருந்து நக்கலப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர… Read more: இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…
- மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.., போலீசார் விசாரணை…மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது… Read more: மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.., போலீசார் விசாரணை…
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக… Read more: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…
- பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்.., ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை…“சாமானிய மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பாரத மொழிகளில்… Read more: பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்.., ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை…
- ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம்..!சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகள் கொண்ட 10 மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269… Read more: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம்..!
- குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு… Read more: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!
- குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…கோவை குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட கேரளாவில் பதுங்கி இருந்த மூவர்… Read more: குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…
- மதுரையில் எம்எல்ஏ நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடுத்தெருவில் போதையில் உற்சாகமாக நடனமாடிய அதிமுக தொண்டர்..,மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போடுவதற்கும் மற்றும்… Read more: மதுரையில் எம்எல்ஏ நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடுத்தெருவில் போதையில் உற்சாகமாக நடனமாடிய அதிமுக தொண்டர்..,
- அம்மாவை ஸ்டாலின் பாராட்டியது அரசியல் உள்நோக்கம் உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…
- ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி 10 நாட்கள் இலவசமாக நடைபெற்றது.… Read more: ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…
- மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளி பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள்… Read more: மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…
- சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…சர்பாசி சட்ட விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்தும் RBL வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கோவை… Read more: சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…
- புகைப்படக் கண்காட்சி:மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியும் சிடார் மையமும்… Read more: புகைப்படக் கண்காட்சி: