புதிய நாடாளுமன்றத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திட்டமிட்ட செலவை விட ரூ.1,250 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, `மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி’ திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் கட்டுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. மத்திய அரசு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் மூலம் ரூ.977 கோடி செலவில் கட்டி முடிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், திட்டமிடப்பட்ட பட்ஜெட்டைவிட அதிகமாக 29 சதவிகிதம், அதாவது ரூ.282 கோடி அதிகமாகச் செலவாகும் என்று மத்திய அரசு தரப்பு வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
இதன் மூலம் நாடாளுமன்றம் கட்டி முடிக்கும்போது சுமார் ரூ 1,250 கோடிக்கு மேல் செலவு உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் மாதம் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். கொரோனாத் தொற்று மற்றும் சிமெண்ட், மணல் விலை அதிகரிப்பு ஆகிய பல்வேறு பிரச்னைகள் காரணமாகக் கட்டடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போதைய புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 857 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட செலவை விட 29 சதவிகிதம் கூடுதலாக அதிகரித்துள்ளது என கூறுவது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]