• Thu. Mar 28th, 2024

‘ரவுடி பேபி’ சூர்யா, சிக்கந்தர் ஷா மீது பாய்கிறது குண்டர் சட்டம்?

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, ‘ரவுடி பேபி’ சூர்யா, சிக்கந்தர் ஷா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மதுரை, திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 33. திருப்பூரில் வசிக்கும் இவர், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் நடத்தும், ‘யுடியூப்’ சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார்.

வேண்டாதவர்களை தாறுமாறாக திட்டியும், ஆபாசமாக பேசியும் வீடியோ வெளியிடுவதுடன், ‘போலீசில் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது’ என்று வசனம் பேசுவதும் இவருக்கு வாடிக்கை.இவரது நண்பரான சிக்கந்தர்ஷாவும், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இவர்களால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார்,

மதுரையில் இருந்த இருவரையும் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா, சிக்கந்தர்ஷா இருவர் மீதும் தமிழகம் முழுதும் புகார்கள் இருப்பதாக, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன.ஏற்கனவே சில இடங்களில் வழக்கும் பதியப்பட்டு உள்ளது.இந்த விபரங்களை சேகரித்து வரும் போலீசார், அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *