ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியுள்ளது பார்க்கும்போது , ஒரு பக்கம் மக்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து விட்டு , மறுபக்கம் அவற்றைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது.
இது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல். திமுக அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கண்டனத்தை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என அழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமல்லாமல் அதன் உப பொருட்களான தயிர் ,வெண்ணெய் ,நெய், பால் பவுடர், பாதாம் பவுடர் ,இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து, அதிமுக அரசு தற்போது உரிய உப பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.
வெளி சந்தையில் ஒப்பிடும்போது தயிர் ,வெண்ணை, நெய், ஐஸ்கிரீம் ,இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் ,ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் விற்பனை நிலையங்களில் பால் பொருட்கள் விலை இன்று முதல் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் தயிர் இன்று முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல் 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய்விளை 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக ,அதாவது 25 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
சிறிய வகைகளும் ஐந்து ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோடைகாலம் ஆரம்பிக்க இருக்கின்ற சூழ்நிலையில் பால் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை பொது மக்கள் குறிப்பாக ,ஏழை ,எளிய மக்கள் இன்னும் அதிகமாக கூடிய நிலையில் இந்த விலை உயர்வு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா ஓரளவு குறைந்து இயல்பான நிலைமை திரும்பிக் கொண்டிருந்த , இந்த சமயத்தில் உக்ரைன் ரஷ்யா போரினால் பெட்ரோல் விலை, டீசல் விலை ஆகியவை எந்த அளவுக்கு உயர போகிறதோ? அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை எந்த அளவுக்கு வரப்போகிறதோ? என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து இருக்கின்ற இந்த தருணத்தில், யாரும் எதிர்பாராத விதமாக பால் பொருட்களின் விலையை உயர்த்தி மக்கள் மீது திமுக அரசு கூடுதல் சுமையை சுமத்தியுள்ளது . இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது ஈடு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பால் பொருட்களின் விலையை அரசு உயர்த்தி உள்ளதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள் . ஆவின் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது. எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ள, ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வை, ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]